Posts

Showing posts from May, 2017

அண்டம்

Image
பழமாயும் புழுக்களென இப்புவி வாழும் மானுடத்தின், கண் எட்டும், கருவி எட்டும் தொலைவுதனை தாண்டி நின்று முடிவிலியென தேற வைக்கும் அண்டமிது யார் பொருட்டோ?... எரிகோளை வாய்நுழைக்கும் கருங்குழியின் ஈர்ப்பு முதல், அணுவின்நுண் உருவுள்ள உயிரதுவின் உணர்வுவரை, யாவர்க்குமோர் இரங்களின்றி அறைகூவல் விடுவதேனோ?... யுகயுகமாய் விரிந்தாலும் நிரப்பவியலா தன்னிருப்பை நுண்நொடியில் அழிந்து மறையும் மானுடத்தின் முன் வைப்பதேனோ?....